சென்னையில் இன்று நடைபெற்ற தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் 84 வது வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், டாக்டர் விதுபாலா பேசியது :
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் சில கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளேன்!
மாரடைப்பு, புற்றுநோய் இன்று அதிகரித்து காணப்படுதற்கு புகையிலை, மது, தீங்குதரும் உணவுகள், உடற்பயிற்சியின்மை, காற்றிலுள்ள மாசுக்கள் காரணம்.
அறியாமை காரணமாக, "கேக்" என்ற நஞ்சை ஒவ்வொரு தாயும் முதல் பிறந்தநாள் அன்று தன் பச்சிளங் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.
கவர்ச்சிக்காக எங்கும் எதிலும் தீங்குதரும் சாயம் கலக்கப்படுகிறது. கேசரி, நன்னாரி, பிரி யாணி.. எதையும் நம்ம ஆட்கள் விட்டுவைக்கவில்லை. கலர் சேர்க்காவிட்டால் சுவைக்காதா? அல்லது வயிற்றுக்குள் போகாதா?
100 புற்றுநோயாளிகள் இருந்தால் அதில் 43 பேருக்கு புகையிலை தான் நோய்க்காரணி என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பழக்கத்தால் (பீடி, சிகரெட், மாவா...) மாரடைப்பு, எலும்புருக்கி நோய் உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.
பீர் உட்பட எல்லாவகை மதுபானங்களும் தீங்கானவை. இவை உடலுக்குள் சென்று நன்மை செய்யும் பூச்சி பொட்டுகளையும் சேர்த்து காலி செய்து விடுகின்றன. தற்போதுள்ள "மதுப்பெருக்கு " தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மது அருந்தியதன் காரணமாக புற்றுநோயை எதிர் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.
வெளிநாட்டில் பட்டாசு வெடித்தால் ஜெயிலில் போட்டுவிடுவார்கள். இங்கோ துக்கம், மகிழ்ச்சி மற்றும் பண்டிகை என்றாலே வெடிதான். காற்று முழுவதையும் அசுத்தமாக்கி விட்டு... ஐயோ எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத பிள்ளைக்கு "இந்த"நோயா என்று அழுது புலம்பி என்ன பயன்?
சாயமும் அமிலமும் கலந்த பெப்சியும் "கோக்" கும் வெளிநாட்டுக் கத்திகள் என்றால் பொவன்டோ உள்நாட்டுக் கத்தி, எந்தக் கத்தி என்றாலும் அதை தவிர்ப்பது தான் அறிவுடைமை!
உழைப்போம்,உடற்பயிற்சி செய்வோம் ஊளை சதையை குறைப்போம்.
வெளிநாட்டில் புறந்தள்ளப்பட்டு, நம் சந்தைகளில் குவிந்து கிடக்கும் கவர்ச்சிகரமான குப்பை உணவுகளை புறந்தள்ளுவோம்!
உறவினர், நண்பர் வீடுகளுக்கு பிஸ்கெட்டுகளுக்கு பதிலாக குறைந்த விலையில் கிடைக்கும் சீசன் பழங்களை வாங்கி செல்வோம்.
நோய்களை தடுக்கும், உடலுக்கு நன்மை தரும் உணவுப்பழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர். அதை நாமும் பின்பற்றுவோம்.
நல்லது அதிகரித்தால் கெட்டது தானாக மறைந்து விடும்!
ஆரோக்கியமான சமூகத்தால் மட்டுமே வணிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும். ஓர் அறிவார்ந்த சமூகமாக உருவெடுத்து அதை செய்து காட்டுவோம் " என்றார், இந்திய விளையாட்டு மருத்துவ மையத்தின் பேராசிரியர் விதுபாலா.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் சில கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளேன்!
மாரடைப்பு, புற்றுநோய் இன்று அதிகரித்து காணப்படுதற்கு புகையிலை, மது, தீங்குதரும் உணவுகள், உடற்பயிற்சியின்மை, காற்றிலுள்ள மாசுக்கள் காரணம்.
அறியாமை காரணமாக, "கேக்" என்ற நஞ்சை ஒவ்வொரு தாயும் முதல் பிறந்தநாள் அன்று தன் பச்சிளங் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.
கவர்ச்சிக்காக எங்கும் எதிலும் தீங்குதரும் சாயம் கலக்கப்படுகிறது. கேசரி, நன்னாரி, பிரி யாணி.. எதையும் நம்ம ஆட்கள் விட்டுவைக்கவில்லை. கலர் சேர்க்காவிட்டால் சுவைக்காதா? அல்லது வயிற்றுக்குள் போகாதா?
100 புற்றுநோயாளிகள் இருந்தால் அதில் 43 பேருக்கு புகையிலை தான் நோய்க்காரணி என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பழக்கத்தால் (பீடி, சிகரெட், மாவா...) மாரடைப்பு, எலும்புருக்கி நோய் உள்ளிட்ட நோய்களில் இறப்பவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.
பீர் உட்பட எல்லாவகை மதுபானங்களும் தீங்கானவை. இவை உடலுக்குள் சென்று நன்மை செய்யும் பூச்சி பொட்டுகளையும் சேர்த்து காலி செய்து விடுகின்றன. தற்போதுள்ள "மதுப்பெருக்கு " தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மது அருந்தியதன் காரணமாக புற்றுநோயை எதிர் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.
வெளிநாட்டில் பட்டாசு வெடித்தால் ஜெயிலில் போட்டுவிடுவார்கள். இங்கோ துக்கம், மகிழ்ச்சி மற்றும் பண்டிகை என்றாலே வெடிதான். காற்று முழுவதையும் அசுத்தமாக்கி விட்டு... ஐயோ எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத பிள்ளைக்கு "இந்த"நோயா என்று அழுது புலம்பி என்ன பயன்?
சாயமும் அமிலமும் கலந்த பெப்சியும் "கோக்" கும் வெளிநாட்டுக் கத்திகள் என்றால் பொவன்டோ உள்நாட்டுக் கத்தி, எந்தக் கத்தி என்றாலும் அதை தவிர்ப்பது தான் அறிவுடைமை!
உழைப்போம்,உடற்பயிற்சி செய்வோம் ஊளை சதையை குறைப்போம்.
வெளிநாட்டில் புறந்தள்ளப்பட்டு, நம் சந்தைகளில் குவிந்து கிடக்கும் கவர்ச்சிகரமான குப்பை உணவுகளை புறந்தள்ளுவோம்!
உறவினர், நண்பர் வீடுகளுக்கு பிஸ்கெட்டுகளுக்கு பதிலாக குறைந்த விலையில் கிடைக்கும் சீசன் பழங்களை வாங்கி செல்வோம்.
நோய்களை தடுக்கும், உடலுக்கு நன்மை தரும் உணவுப்பழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர். அதை நாமும் பின்பற்றுவோம்.
நல்லது அதிகரித்தால் கெட்டது தானாக மறைந்து விடும்!
ஆரோக்கியமான சமூகத்தால் மட்டுமே வணிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும். ஓர் அறிவார்ந்த சமூகமாக உருவெடுத்து அதை செய்து காட்டுவோம் " என்றார், இந்திய விளையாட்டு மருத்துவ மையத்தின் பேராசிரியர் விதுபாலா.
No comments:
Post a Comment